sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அறிஞர் அண்ணா கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்கம்

/

அறிஞர் அண்ணா கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்கம்

அறிஞர் அண்ணா கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்கம்

அறிஞர் அண்ணா கல்லுாரியில் தேசிய மாணவர் படை துவக்கம்


ADDED : நவ 14, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 14, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய மாணவர் படை துவக்க விழா நடந்தது. கல்லுாரி அகத்தர மதிப்பீட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜலட்சுமி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் தனபால் தலைமை வகித்து பேசுகையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே தேசிய மாணவர் படை உள்ள முதன்மை கல்லுாரியாக அறிஞர் அண்ணா கல்லுாரி உள்ளது. என்.சி.சி., மாணவர்களின் ஆளுமையை மேம்படுத்தவும், சமூகப் பொறுப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது. மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் ஒழுக்கத்தை வலியுறுத்துவதே, இதன் குறிக்கோள். சமூக முன்னேற்றத்திற்காக ஒவ்வொருவரும் பங்களிக்க வேண்டும்,'' என்றார்.

விழாவில், சேலம் - 11 என்.சி.சி.,யின் கமாண்டிங் அதிகாரி கர்னல் சூரஜ் நாயர், என்.சி.சி., கொடியை ஏற்றி, தேசிய மாணவர் படையை துவக்கி வைத்து பேசுகையில், ''என்.சி.சி., மாணவர்கள், அதிக நுால்களை வாசிக்க வேண்டும். ஒருமைப்பாட்டு உணர்வுகளையும், பன்மொழி அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும். இதன் மூலம் முப்படைகளில் வேலைவாய்ப்பை பெறலாம்,'' என்றார்.

இதில், சேலம் - 11 என்.சி.சி., இணை கமாண்டிங் அதிகாரி ரிசால்தார் ரத்தீஷ், கல்லுாரி கல்விப்புலம் ஒருங்கிணைப்பாளர் ஜெகன் உள்பட பலர் பங்கேற்றனர். என்.சி.சி., பொறுப்பு அதிகாரி பிரேமா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us