ADDED : செப் 27, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, ஆனந்துார் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம், அம்மன் கோவில் பதி கிராமத்தில் நடந்தது.
தலைமை ஆசிரியர் பச்சமுத்து தலைமை வகித்தார். அம்மன் கோவில் பதி ஊரட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மஞ்சுளா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்ணம்மாள், திட்ட அலுவலர் சிவப்பிரகாசம், உதவி திட்ட அலுவலர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், அம்மன் கோவில்பதி கிராமத்தில் உள்ள பள்ளி வளாகம் மற்றும் கோவில் பகுதிகளில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் துாய்மை பணியில் ஈடுபட்டனர்.