sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுக்கு பயில புது கட்டடம்

/

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுக்கு பயில புது கட்டடம்

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுக்கு பயில புது கட்டடம்

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்தில் போட்டி தேர்வுக்கு பயில புது கட்டடம்


ADDED : மார் 05, 2024 12:17 PM

Google News

ADDED : மார் 05, 2024 12:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று தமிழக சட்டசபை பேரவை நுாலகக்குழுவினர், மாவட்ட மைய நுாலகம், நெடுங்கல், ஆவத்தவாடி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நுாலகங்களை ஆய்வு செய்தனர்.

நுாலகக்குழு தலைவர் மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் மதுரவாயல் கணபதி, தியாகராய நகர் கருணாநிதி, அரூர் சம்பத்குமார், பெரியகுளம் சரவணக்குமார், முசிறி தியாகராஜன், துறையூர் ஸ்டாலின் குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலை வகித்தார்.

மாவட்ட மைய நுாலகத்தில் ஆய்வின் போது, வாசகர்கள், போட்டி தேர்வர்கள் பேசுகையில், 'நுாலகத்தில் இடவசதி குறைவாக உள்ளதால் சிரமமாக உள்ளது. எனவே, போட்டி தேர்விற்கு படிப்பதற்கு மட்டும் தனி அறையும், கூடுதல் புத்தங்களும் வழங்க வேண்டும். நுாலக சுற்றுச்சுவர், இணையதளம் மூலம் புத்தங்கள் படிப்பதற்கு வைபை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்' என்றனர்.

போட்டி தேர்விற்கு கட்டடம் கட்டி தரப்படும் உட்பட அனைத்து கோரிக்கைகளும், 6 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என நுாலகக்குழு தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில், சட்டசபை பேரவை செயலக நுாலக குழுவின் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி கமிஷனர் சினேகா, துணை கலெக்டர் பிரியங்கா, பொது நுாலக இணை இயக்குனர் இளங்கோ சந்தரகுமார், குழு அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட நுாலக அலுவலர் தனலட்சுமி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us