/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் நுாலகத்திற்கு புதிய கட்டடம் திறப்பு
/
ஓசூர் நுாலகத்திற்கு புதிய கட்டடம் திறப்பு
ADDED : டிச 25, 2025 07:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் முழு நேர கிளை நுாலகத்திற்கு, தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியிலி-ருந்து, 4.50 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்-டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா நேற்று நடந்தது.
மாவட்ட நுாலக அலுவலர் சக்-திவேல் தலைமை வகித்து திறந்து வைத்தார். வாசகர் வட்ட தலைவர் கருமலை தமிழாழன், பொருளாளர் ஜெகநாதன், நுாலக கண்காணிப்-பாளர் ஹரி நாராயணன், நுால் இருப்பு சரிபார்ப்பு அலுவலர் முருகேசன், உறுப்பினர் கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். நுாலகர் ரேணுகா சக்-திவேல் நன்றி கூறினார்.

