sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மருந்து நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

/

மருந்து நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

மருந்து நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு

மருந்து நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு


ADDED : நவ 07, 2025 12:57 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, ஓசூர், ராஜாஜி லே அவுட், கோவிந்த அக்ரஹாரத்தில், ஷைன் பார்மா சூட்டிகல்ஸ் நிறுவனத்தின் இருமல் மருந்து தயாரிக்கும் நிறுவனம், 'ஷைன் ஸ்டார் பார்மா' என்ற பெயரில் இயங்கி வருகிறது. இதை, ஓசூர் மதகொண்டப்பள்ளியை சேர்ந்த அப்துல் மாலிக், 38 என்பவர் நடத்தி வருகிறார்.

இதில், அனுமதியில்லாத பல மருந்துகளை, இவர்கள் தயார் செய்து கொடுப்பதாக, மருந்து கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு சென்ற புகார் படி, நேற்று தர்மபுரி மண்டல மருந்து கட்டுப்பாடு இன்ஸ்பெக்டர் ராம் தலைமையில், சென்னை மத்திய மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் சக்திவேல், ஓசூர், மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் ஆய்வு நடத்தினர். இதில், அந்நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட, 12,000 லேபிள்கள் மற்றும் 15 மாதிரி பாட்டில்களை சேகரித்து சென்றனர். மேலும், 'இவை அனைத்தும் பரிசோதிக்கப்பட்டு, தவறு நடந்திருக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us