ADDED : செப் 22, 2024 05:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: பர்கூர், எம்.ஜி.ஆர்., நகர், செட்டியார் தெருவை சேர்ந்த மூதாட்டி சாலம்மாள், 85. இவர் கடந்த மாதம், 12ல், பர்கூர் ஓம் சக்தி கோவில் அருகே நடந்து சென்றபோது, இவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றது.
படுகாயமடைந்த சாலம்மாள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.