/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஒரு கிராமம் ஒரு பயிர்' விழிப்புணர்வு கூட்டம்
/
'ஒரு கிராமம் ஒரு பயிர்' விழிப்புணர்வு கூட்டம்
ADDED : மே 03, 2024 07:31 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அச்சமங்கலத்தில், 'ஒரு கிராமம் ஒரு பயிர்' திட்டம் மற்றும் கோடை உழவு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) கலா தலைமை வகித்து பேசுகையில், “ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் வாயிலாக விவசாயிகளுக்கு விதை முதல் பயிர் அறுவடை வரை கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்த ஆலோசனை வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் தொழில்நுட்ப பயிற்சிகளை விவசாயிகள் கடைபிடித்து, அதன் மூலம், 15 முதல், 20 சதவீத கூடுதல் மகசூல் பெறலாம்,” என்றார்.பர்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி, உதவி வேளாண் அலுவலர் தனசேகர் மற்றும், 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.