/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காய்கறி சந்தை கட்டுமான பணிகளை முடிக்க உத்தரவு
/
காய்கறி சந்தை கட்டுமான பணிகளை முடிக்க உத்தரவு
ADDED : நவ 27, 2024 12:58 AM
காய்கறி சந்தை கட்டுமான
பணிகளை முடிக்க உத்தரவு
கிருஷ்ணகிரி, நவ. 27-
கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட, புதிய பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம், பயணியர் இருக்கைகள், கழிப்பறைகள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் கடைகளில், மாவட்ட கலெக்டர் சரயு ஆய்வு செய்தார்.
அப்போது கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனவும், கடைகளில் சுத்தமான எண்ணெய் மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்தவும்
அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டை தினசரி காய்கறி சந்தையில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில், 1.10 கோடி ரூபாய் மதிப்பில், 77 கடைகள் கட்டப்படுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பயன்பாட்டிற்கு வழங்க கூறினார்.
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், கமிஷனர் ஸ்டான்லிபாபு, நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், உதவி பொறியாளர் உலகநாதன் மற்றும் நகராட்சி அலுவலர்கள்
உடனிருந்தனர்.

