/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தற்காலிக துாய்மை பணியாளர்கள் 14 பேருக்கு வீடு வழங்க ஆணை
/
தற்காலிக துாய்மை பணியாளர்கள் 14 பேருக்கு வீடு வழங்க ஆணை
தற்காலிக துாய்மை பணியாளர்கள் 14 பேருக்கு வீடு வழங்க ஆணை
தற்காலிக துாய்மை பணியாளர்கள் 14 பேருக்கு வீடு வழங்க ஆணை
ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தேசிய துாய்மை பணியாளர் நல ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில், மாவட்ட கலெக்டர் சரயு முன்னிலையில், தேசிய துாய்மை பணியாளர் நல ஆணையம் குறித்த ஆய்வுக்-கூட்டம் நடந்தது.
தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு தாட்கோ வீடு வழங்கும் திட்டத்தில், 14 பயனாளி-களுக்கு, 18.27 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு வழங்-குவதற்கான ஆணைகளையும், துாய்மை பணி-யாளர் ஒருவரின் மகளுக்கு, தாட்கோ அலுவல-கத்தில் இளநிலை உதவியாளர் பணி ஆணை-யையும் வழங்கினார். மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, கூடுதல் ஆட்சியரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குன-ருமான வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி கமி-ஷனர் சினேகா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு-வலர் ரமேஷ்குமார், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.