/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இயற்கை வேளாண் பொருள் தயாரிப்பு பயிற்சி
/
இயற்கை வேளாண் பொருள் தயாரிப்பு பயிற்சி
ADDED : ஏப் 17, 2025 01:36 AM
வீரபாண்டி:வீரபாண்டி வட்டாரம் லகுவம்பட்டியை சேர்ந்த, 40 விவசாயிகளுக்கு, 'அட்மா' திட்டத்தில், அங்கக வேளாண் இடுபொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம், லகுவம்பட்டி கால்நடை மருத்துவ வளாகத்தில் நேற்று நடந்தது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் ராஜேந்திரன், பயிற்சியின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
பஞ்சகவ்யா, மீன் அமிலம், மண்புழு உரம், இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல், ஊட்டமேற்றிய சாணம் உள்ளிட்ட இயற்கை வேளாண் பொருட்கள் தயாரிப்பு முறைகள் குறித்து, செயல் விளக்கங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியாளராக, முன்னோடி இயற்கை ஆர்வலர் கலைச்செல்வி, பஞ்சகாவ்யா தயாரிப்பு குறித்து செயல்விளக்கம் அளித்தார். உதவி வேளாண் அலுவலர்கள் பழனிசாமி, உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரஸ்வதி பங்கேற்றனர். மேலும் இயற்கை இடுபொருட்கள், விவசாயிகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.