sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

18 மாதங்கள் கடந்தும் முடியாத மேம்பால பணிகள்தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

/

18 மாதங்கள் கடந்தும் முடியாத மேம்பால பணிகள்தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

18 மாதங்கள் கடந்தும் முடியாத மேம்பால பணிகள்தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்

18 மாதங்கள் கடந்தும் முடியாத மேம்பால பணிகள்தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்


ADDED : ஏப் 19, 2025 01:09 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி துவங்கி, 18 மாதங்கள் முடிந்த போதும், பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. அதனால் வாகன ஓட்டிகள்நெரிசலில் சிக்கி திணறி வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இரு மார்க்கத்திலும் தினமும், 70,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. விடுமுறை நாட்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரை செல்லும். வாகன போக்குவரத்து அதிகமுள்ள இச்சாலையில் உள்ள ஓசூர் சிப்காட் ஜங்ஷன், கோபசந்திரம், சாமல்பள்ளம், சுண்டகிரி, மேலுமலை மற்றும் கிருஷ்ணகிரி போலுப்பள்ளி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே என மொத்தம், 6 இடங்களில் மேம்பாலம் கட்டும் பணி கடந்த, 2023 அக்., மாதம் தேசிய நெடுஞ்சாலைத்துறை துவங்கியது.

இதில், சாமல்பள்ளம் பகுதியில் மட்டும் பணி முடிவடைந்துள்ளது.

மற்ற, 5 இடங்களிலும் மந்த கதியில் பணிகள் நடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் கடும் அவதியடைந்து வருகின்றனர். பால வேலைகள் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட, 18 மாதங்கள் முடிந்து விட்டன. ஆனால், 12 மாதத்தில் பால பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை வந்துள்ளதால், கர்நாடகா, ஓசூர் பகுதியில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் பலர் நேற்று படையெடுத்தனர். அதனால், மேம்பால வேலை நடக்கும் கோபசந்திரம் பகுதியில், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து முடங்கி, 3 கி.மீ., துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்தன. அப்பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல, 30 நமிடங்கள் வரை ஆனதால், வாகன ஓட்டிகள் வெறுப்படைந்தனர்.






      Dinamalar
      Follow us