ADDED : மே 08, 2024 05:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த அர்த்தக்கல் பகுதியில், நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதனால், விவசாயி சித்தராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்தன. 3 லட்சம் ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.அதேபோல், தேன்கனிக்கோட்டை அடுத்த கொல்லப்பள்ளி பகுதியில், நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, 3 தென்னை மரங்கள் மின்னல் தாக்கி தீப்பிடித்து எரிந்து நாசமாகின.

