/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவர்களுக்கு பஸ் வசதி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை
/
மாணவர்களுக்கு பஸ் வசதி அரசுக்கு பெற்றோர் கோரிக்கை
ADDED : நவ 25, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர் :தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கீரைப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.
பள்ளி செல்வதற்கு பஸ் வசதி இல்லாததால் மாணவ, மாணவியர், 3 கி.மீ., துாரம் நடந்து சென்று வருகின்றனர்.
எனவே, மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, காலை மற்றும் மாலை நேரங்களில் கீரைப்பட்டிக்கு பஸ் இயக்க வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

