sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கிடப்பில் சாலை பணி: கண்டித்து மக்கள் மறியல்

/

கிடப்பில் சாலை பணி: கண்டித்து மக்கள் மறியல்

கிடப்பில் சாலை பணி: கண்டித்து மக்கள் மறியல்

கிடப்பில் சாலை பணி: கண்டித்து மக்கள் மறியல்


ADDED : நவ 12, 2025 01:16 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட் டம், போச்சம்பள்ளி அடுத்த, வலசகவுண்டனுார் பஞ்.,க்கு உட்பட்ட, கூச்சானுார் மோட்டூர் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இக்கிராம மக்கள் பயன்படுத்தி வந்த மண் சாலையை, சிமென்ட் சாலையாக அமைக்க கடந்த அக்., 27ல் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கு, அதே பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தன் பட்டா நிலத்தில் வழி உள்ளதாகவும், அதில், சாலை அமைக்கக்கூடாது எனவும், இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறி, சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார். அதை கண்டித்து, கூச்சானுார் மோட்டூர் கிராம மக்கள் அப்போது, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரணையில், சம்மந்தப்பட்ட இடம், அரசு புறம்போக்கு நிலம் என்பதால், 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமென்ட் சாலை அமைக்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. பணியை நிறைவு செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளதால், நேற்று கூச்சானுார் மோட்டூர் கிராம மக்கள், மாணவ, மாணவியர் என, 200க்கும் மேற்பட்டோர், போச்சம்பள்ளி, சந்துார் வழியாக, கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், கூச்சானுார் பகுதியில் நேற்று காலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போச்சம்பள்ளி தாசில்தார் அருள், பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் ஆகியோர், 2 நாட்களில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை முடித்து தருவதாக, உறுதியளித்ததை அடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us