sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த மக்கள்

/

அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த மக்கள்

அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த மக்கள்

அரை மணி நேரம் தாமதமாக வந்ததால் அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்த மக்கள்


ADDED : டிச 24, 2024 07:59 AM

Google News

ADDED : டிச 24, 2024 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூர் அருகே, தொடர்ந்து அரை மணி நேரம் தாமதமாக வரும், அரசு டவுன் பஸ்சை மாணவ, மாணவியர், தொழிலாளர்கள் சிறைபிடித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து பேரண்டப்பள்ளி, காமன்தொட்டி வழியாக பாத்தக்கோட்டா கிராமத்திற்கு, 22ம் நம்பர் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் தினமும் காலை, 7:45 மணிக்கு பாத்தக்கோட்டா கிராமத்திற்கு வரும். அங்-கிருந்து, சூளகிரி, ஓசூருக்கு செல்லும் தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் அந்த பஸ்சில் சென்று வந்தனர். இந்த பஸ், கடந்த சில மாதங்களுக்கு முன், மேலும், 2 கி.மீ., தொலைவிலுள்ள யாகனப்பள்ளி வரை நீட்டிக்கப்பட்டது.

இதனால், வழக்கமாக பாத்தக்கோட்டாவிற்கு காலை, 7:45 மணிக்கு வந்த டவன் பஸ், தற்போது அரை மணி நேரம் தாமதமாக, 8:15 மணிக்கு வருகி-றது.உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்ட, பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் தொழிலாளர்கள், நேற்று பாத்தக்-கோட்டாவுக்கு வந்த டவுன் பஸ்சை சிறைபிடித்தனர். அவர்-களிடம், உத்தனப்பள்ளி போலீசார் மற்றும் பஸ் டிரைவர், கண்-டக்டர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நேரத்திற்கு பஸ் வர நடவ-டிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டு, அரை மணி நேரத்திற்கு பின், டவுன் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.






      Dinamalar
      Follow us