/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட ஏமனுார் மக்கள்
/
ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட ஏமனுார் மக்கள்
ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட ஏமனுார் மக்கள்
ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட ஏமனுார் மக்கள்
ADDED : டிச 19, 2024 01:01 AM
ஏரியூர், டிச. 19-
பென்னாகரம் தாலுகாவிற்கு உட்பட்ட கிழக்கு ஏமனுார் கிராமத்தை சேர்ந்தவர் மயில்சாமி. இவரது மருமகள் அம்சா, 27; இவர், கடந்த, 16ல், உடல்நிலை சரியில்லாத தன் குழந்தையை எடுத்துக்கொண்டு, மாமனார் மயில்சாமியுடன் சூப்பர் எக்ஸல் மொபட்டில், ஏமனுார் வனப்பகுதி வழியாக, ஏரியூர் அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டு, வீடு திரும்பினார்.
ஒட்டுப்பள்ளம் என்ற பகுதியில் அவ்வழியாக வந்த பென்னாகரம் வனத்துறையினர் மொபட்டில் சென்ற மயில்சாமியை தடுத்து கீழே தள்ளி, அம்சாவை தாக்கி விட்டு, மயில்சாமியை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். வனப்பகுதியில் குழந்தையோடு தவித்த அம்சாவை அவ்வழியே வந்தோர் மீட்டு, பென்னாகரம் ஜி.ஹெச்.,ல் சேர்த்தனர். ஏரியூர் போலீசில் அம்சா புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், அம்சாவை தாக்கிய வனத்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி, ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனை ஏமனுார் பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். பென்னாகரம் பொறுப்பு டி.எஸ்.பி., மனோகரன் சம்மந்தப்பட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து கலைந்து சென்றனர்.

