ADDED : நவ 05, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மக்கள் குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி, நவ. 5-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில் நேற்று நடந்தது. இதில், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 234 மனுக்களை வழங்கினர். கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சுந்தரராஜ், ஆதி திராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பத்மலதா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.