ADDED : செப் 24, 2024 01:35 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி வட்டம், கவுண்டனுார் அடுத்த அத்திப்பள்ளத்தை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: எங்கள் முன்னோர்கள் கட்-டிய வீடுகளில், தற்போது வரை நாங்கள் வசித்து வருகிறோம். ஒவ்வொரு வீட்டிலும், 2 முதல், 3 குடும்பத்தினர் வசிப்பதால், நாள்தோறும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம்.
மழைக்காலங்களில், வீட்டில் நீர் கசியும் நிலை உள்ளதால், குழந்-தைகள், முதியவர்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி வருகிறோம். போதிய இடவசதி இல்லாததால், குழந்தைகள் வீட்டில் பாடங்-களை
படிக்க முடியாமல் தெரு வெளிச்சத்தில் கல்வி கற்கும் நிலை உள்ளது. ஆதி திராவிட மக்களாகிய எங்களது, 65 குடும்பத்-தினருக்கு அரசு புறம்போக்கு நிலத்தில், இலவசமாக வீட்டுமனை வழங்கி, அரசு சார்பில் வீடுகள் கட்டி தர
வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.