sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நிலத்தை மீட்டு தரக்கோரி அ.தி.மு.க., மாஜி நிர்வாகி மனு

/

நிலத்தை மீட்டு தரக்கோரி அ.தி.மு.க., மாஜி நிர்வாகி மனு

நிலத்தை மீட்டு தரக்கோரி அ.தி.மு.க., மாஜி நிர்வாகி மனு

நிலத்தை மீட்டு தரக்கோரி அ.தி.மு.க., மாஜி நிர்வாகி மனு


ADDED : ஜன 30, 2024 03:24 PM

Google News

ADDED : ஜன 30, 2024 03:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கல்குவாரி உரிமையாளரால் பறிக்கப்பட்ட தன் நிலத்தை மீட்டு தருமாறு, அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார்.கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரத்தை சேர்ந்தவர் வெங்கட்டராமன்.

அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர். இவர் நேற்று, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:போச்சம்பள்ளி அடுத்த வீரமலை பஞ்., பகுதியில் எனக்கு சொந்தமான, 2.50 ஏக்கர் நிலம் உள்ளது. இதை அப்பகுதியில் கல்குவாரி நடத்தி வரும் அற்புதம் என்பவர், வாங்கி கொள்வதாக கூறி, கடந்த, 2022 ல் அட்வான்ஸ் தொகை கொடுத்தார். ஆனால் கிரையம் செய்யவில்லை. இந்நிலையில் என் நிலத்தில், அவரது கல்குவாரி கழிவுகளை கொட்டியுள்ளார். இது குறித்து கேட்டால் மிரட்டுகிறார். முதல்வர் தனிப்பிரிவு, போலீஸ், ஐ.ஜி., அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை. போலீசார் வழக்கு பதிய மறுக்கிறார்கள். இது குறித்து விசாரித்து, என் நிலத்தை மீட்டோ, அல்லது கொடுக்க வேண்டிய மீதி தொகையையோ பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us