/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி; தொடர் சரிவால் அதிகாரிகள் குழு விசாரிக்க முடிவு
/
கிருஷ்ணகிரி அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி; தொடர் சரிவால் அதிகாரிகள் குழு விசாரிக்க முடிவு
கிருஷ்ணகிரி அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி; தொடர் சரிவால் அதிகாரிகள் குழு விசாரிக்க முடிவு
கிருஷ்ணகிரி அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி; தொடர் சரிவால் அதிகாரிகள் குழு விசாரிக்க முடிவு
ADDED : மே 09, 2024 06:11 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பல அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், தொடர் சரிவை சந்தித்துள்ளது. இது குறித்து கல்வி அதிகாரிகள் குழு விசாரணை நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச், 1ல் தொடங்கி, 22 வரை நடந்தது. இதன் முடிவுகள் கடந்த, 6ல் வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்டம், 91.87 சதவீத தேர்ச்சியுடன் மாநிலத்தில், 35வது இடத்தை பிடித்தது. கடந்தாண்டில், 89 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது, 91.87 சதவீதம் தேர்ச்சி அடைந்திருந்தாலும், அரசு பள்ளிகளின் பங்களிப்பு, மிக குறைவாகவே உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 106 அரசு மேல்நிலைப் பள்ளிகள், ஒரு அரசு மாதிரிப்பள்ளி உட்பட, 107 பள்ளிகள் உள்ளன. இதில், 5,329 மாணவர்கள், 6,915 மாணவியர் உள்ளிட்ட, 12,244 பேர் தேர்வு எழுதினர். இதில், 4,462 மாணவர்கள், 6,350 மாணவியர் என மொத்தம், 10,812 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 83.73 சதவீதம், மாணவியர், 91.83 சதவீதம் என மொத்தம், 88.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.பிளஸ் 2 தேர்வில், 6 அரசு பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. இதேபோல், 90 முதல், 99 சதவீதத்திற்குள், 49 பள்ளிகள், 80 முதல், 90 சதவீதத்திற்குள், 35 பள்ளிகள், 70 முதல் 80 சதவீதத்திற்குள், 14 பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளன. பர்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 62.26 சதவீதம், வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 46.81 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், பர்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கடந்தாண்டை விட தற்போது, 22.45 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது. அதேபோல, ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, 16.54, பாரூர் அரசு மேல்நிலைப்பள்ளி, 14.89, கிருஷ்ணகிரி நகராட்சி மேல்நிலைப்பள்ளி, 12.60,, வேப்பனஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 8 சதவீத தேர்ச்சி குறைந்துள்ளது. அதேபோல, பெருகோபனப்பள்ளி, கண்ணன்டஹள்ளி, கப்பல்வாடி, மாடரஹள்ளி, சிந்தகம்பள்ளி உள்ளிட்ட, 40 அரசு பள்ளிகளிலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்ததால், மாவட்ட கலெக்டர் சரயு, சி.இ.ஓ., மகேஸ்வரியிடம் இது குறித்து விளக்கம் கேட்டு கடிந்துள்ளார். இதையடுத்து, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், சி.இ.ஓ., பேசி, ஒவ்வொரு பள்ளியும் தேர்வு விகிதம் குறைந்த காரணத்தை எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும் எனவும், இது குறித்து விசாரிக்க, கல்வி அதிகாரிகள் குழு அமைக்கப்படும் எனவும், தெரிவித்துள்ளார்.