/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, மாடு வரத்தின்றி 'வெறிச்'
/
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, மாடு வரத்தின்றி 'வெறிச்'
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, மாடு வரத்தின்றி 'வெறிச்'
போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடு, மாடு வரத்தின்றி 'வெறிச்'
ADDED : ஜூன் 09, 2025 03:06 AM
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வாரச்சந்தை, ஞாயிற்-றுக்கிழமையில் கூடுவது வழக்கம், இந்த வாரச்சந்தைக்கு கிருஷ்-ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்துார் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆடு, மாடுகளை விற்கவும், அவைகளை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் அதிகளவு வருவது வழக்கம்.
நேற்று வழக்கம்போல் நடந்த வாரச்-சந்தைக்கு, 300க்கும் குறைவான ஆடுகள், 100க்கும் குறைவான மாடுகள் விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதேபோல் அவைகளை வாங்க வியாபாரிகள், விவசாயிகள் வரா-ததால் வாரச்சந்தை வெறிச்சோடியது. இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் கோடி கணக்கில் நடக்க வேண்டிய வர்த்தகம், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாவே ஆடு, மாடுகள் விற்பனையான-தாக வியாபாரிகள் தெரிவித்தனர்.