sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏ.டி.எம்., கொள்ளையர்களை தேடி வட மாநிலத்திற்கு போலீசார் விரைவு

/

ஏ.டி.எம்., கொள்ளையர்களை தேடி வட மாநிலத்திற்கு போலீசார் விரைவு

ஏ.டி.எம்., கொள்ளையர்களை தேடி வட மாநிலத்திற்கு போலீசார் விரைவு

ஏ.டி.எம்., கொள்ளையர்களை தேடி வட மாநிலத்திற்கு போலீசார் விரைவு


ADDED : அக் 07, 2024 03:14 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி - குப்பம் செல்லும் சாலையில், எஸ்.பி.ஐ., வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை கடந்த மாதம், 21 அதிகாலை மர்ம கும்பல் உடைத்து, 23 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். இதே போல், குருபரப்பள்ளி, ஓசூர் ஏ.டி.எம்.,களில் 24.50 லட்சம் ரூபாய் கடந்த சில மாதங்களுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்டது. இக்கொள்ளை அனைத்தும், ஏ.டி.எம்., இயந்திரங்களை வெல் டிங் மூலம் வெட்டி எடுத்து கொள்ளை நடந்துள்ளது.

கடந்த வாரம் கேரளாவில், 3 ஏ.டி.எம்.,களில், 66 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து வந்த கும்பலை, நாமக்கல் அருகே போலீசார் பிடித்தனர். இதில் ஒருவரை, போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். மற்றொருவருக்கு காலில் குண்டு பாய்ந்து ஒரு காலை டாக்டர்கள் அகற்றினர். அக்கொள்ளையர்களிடம், கிருஷ்ணகிரி போலீசார் விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த ஏ.டி.எம்., கொள்ளையில், வடமாநில கும்பல் ஈடுபட்டது தெரிந்தது. ராஜஸ்தான், அரியானா மாநிலங்களை சேர்ந்த அக்கும்பலை பிடிக்க, கிருஷ்ணகிரி தனிப்படை போலீசார், அங்கு விரைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us