நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வட்ட போட்டோ, வீடியோ ஒளிப் பதிவாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில், நேற்று சமத்துவ பொங்கல் விழா கொண்-டாடப்பட்டது. வட்ட சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
இதில், ஏராளமான புகைப்பட கலைஞர்கள், புதிய பானையில் அரிசியிட்டு, வாழை, கரும்பு, தோரணங்கள் கட்டி பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். விழாவில், மாநில தலைவர் சிவகுமார், நகர சங்கத்தின் டைரி மற்றும் காலண்டரை வெளியிட்டு, சங்க செயல்பாடுகள் குறித்தும், காக்கும் கரங்கள் திட்டம் பற்றியும் பேசினார்.