/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.17 கோடி கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது
/
ரூ.1.17 கோடி கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது
ரூ.1.17 கோடி கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது
ரூ.1.17 கோடி கையாடல் செய்த தனியார் நிறுவன ஊழியர் கைது
ADDED : நவ 25, 2024 01:27 AM
கிருஷ்ணகிரி: தனியார் நிறுவனத்தில், 1.17 கோடி ரூபாய் கையாடல் செய்த ஊழியரை, போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கலுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் வசந்த், 32; அப்பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தின் மூத்த கணக்காளர். அதே நிறுவனத்தில் கேசவமூர்த்தி, 30, நிர்-வாக கணக்காளராக பணியாற்றி வருகிறார். மூலப்பொருட்கள் வழங்கியவர்களுக்கு, கேசவமூர்த்தி முறையாக பணம் கொடுக்காமலும், பணிக்கும் சரியாக வராமலும் இருந்தார்.
இதுகுறித்து வசந்த் கேட்டபோது, உடல் நலம் சரியில்லை என கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த வசந்த், ஆடிட்டர் மூலம் நிறுவ-னத்தின் வரவு - செலவு கணக்குகளை தணிக்கை செய்தார். இதில் கேசவமூர்த்தி, நிறுவன பணத்தை முறைகேடாக எடுத்து அவரது மனைவியின் கணக்கிலும், சக ஊழியர் ரஞ்சித் என்ப-வரின் கணக்கிலும், 1.17 கோடி ரூபாய் முதலீடு செய்தது தெரிந்-தது-.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் வசந்த் புகாரளித்தார். விசாரித்த போலீசார் கேசவமூர்த்தியை கைது செய்தனர். இது தொடர்பாக கேசவமூர்த்தியின் மனைவி திவ்யா, ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.