/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை பொருட்கள் விற்ற 10 பேருக்கு 'காப்பு'
/
புகையிலை பொருட்கள் விற்ற 10 பேருக்கு 'காப்பு'
ADDED : அக் 27, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, அக். 27-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்த புகையிலை பொருட்கள் விற்கிறதா என, அந்தந்த பகுதி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில், கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், மகாராஜகடை, ஓசூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற, 10 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1,020 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.