/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை, லாட்டரி விற்ற 19 பேருக்கு 'காப்பு'
/
புகையிலை, லாட்டரி விற்ற 19 பேருக்கு 'காப்பு'
ADDED : நவ 04, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கிறதா என போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இதில், ஊத்தங்கரை, கந்திகுப்பம், பர்கூர், கிருஷ்-ணகிரி, குருபரப்பள்ளி, ஓசூர், சூளகிரி, பாகலுார், பேரிகை, மத்-திகிரி, நல்லுார், கெலமங்கலம், தளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமி-ருந்து, 1,300 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறி-முதல் செய்தனர். அதே போல், லாட்டரி சீட்டு விற்ற சிங்காரப்-பேட்டை, கிருஷ்ணகிரி, பேரிகை பகுதிகளைச் சேர்ந்த, 4 பேரை கைது செய்த போலீசார், 560 ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்-களை பறிமுதல் செய்தனர்.