sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நகராட்சி அலுவலர்களை தரக்குறைவாக பேசியதால் கொதிப்பு தி.மு.க., கி.கிரி நகர செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

/

நகராட்சி அலுவலர்களை தரக்குறைவாக பேசியதால் கொதிப்பு தி.மு.க., கி.கிரி நகர செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நகராட்சி அலுவலர்களை தரக்குறைவாக பேசியதால் கொதிப்பு தி.மு.க., கி.கிரி நகர செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நகராட்சி அலுவலர்களை தரக்குறைவாக பேசியதால் கொதிப்பு தி.மு.க., கி.கிரி நகர செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 30, 2025 01:27 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகராட்சி அலுவலர்களை தரக்குறைவாக பேசியதால் கொதிப்பு தி.மு.க., கி.கிரி நகர செயலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலர்களை தரக்குறைவாக பேசிய, தி.மு.க., நகர செயலாளர் நவாப்பை கண்டித்து, நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி கிளை தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார். செயலாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

அப்போது, அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தினேஷ், மாவட்ட தலைவர் சந்திரன் ஆகியோர், நிருபர்

களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா. கிருஷ்ணகிரி நகர, தி.மு.க., செயலாளராக உள்ள அவரது கணவர் நவாப், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு, அலுவலர்களை ஒருமையில் தரக்குறைவாக பேசி வருகிறார். கடந்த, 25 காலை, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, கலெக்டர் சரயு தலைமையில் நடந்துள்ளது. அன்று மாலை அங்கு, அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டமும் நடந்துள்ளது. அங்கு, நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், நகராட்சி பணியாளர்களுடன் சென்று, கிருமிநாசினி தெளித்துள்ளார்.

அப்போது அழைப்பின் பேரில், நகராட்சி அலுவலகம் சென்றவர், கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி அறைக்கு சென்றுள்ளார். அமர்ந்திருந்த நகர செயலாளர் நவாப், 'நீ என்ன அ.தி.மு.க.,வுக்கு வேலை செய்கிறாயா. தி.மு.க., கூட்டமும் ரவுண்டானாவில் நடக்கிறது. அங்கு ஏன் கிருமி நாசினி தெளிக்கவில்லை. விருப்பமிருந்தால் வேலை செய், இல்லா விட்டால் ஓடி விடு' எனக்கூறி திட்டியுள்ளார். துாய்மை பணியாளர்கள், தி.மு.க., கூட்டம் நடக்கும் இடத்திலும் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்து வருகிறார்கள் எனக்கூறியும் கேட்காமல், அவரை ஒருமையில் தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

தமிழகம் முழுவதும், மனைவி வகிக்கும் அரசு பொறுப்புகளை, தி.மு.க., நிர்வாகிகளாக உள்ள அவர்களது கணவர்களே எடுத்து நடத்துவதும், அதிகாரிகளை திட்டுவதும் வாடிக்கையாகி விட்டது. கிருஷ்ணகிரி நகராட்சியில் நடந்த, இந்த சம்பவத்தை கண்டிப்பதன் மூலம், வேறெங்கும் இது போல நடக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, அரசு ஊழியர் சங்கம் சார்பில், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தியிடம் கூறினோம்.

இதுவரை நடவடிக்கை எடுக்காததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். தி.மு.க., நகர செயலாளர் நவாப், அவரது கட்சி அலுவலகத்தில் ஆளுமை

செய்யலாம். நகராட்சி அலுவலகத்திற்குள் வரக்கூடாது. சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனை மிரட்டும் வகையில், அவர் மீது, தற்காலிக டெங்கு தடுப்பு பெண் ஊழியர்களை வைத்து மிரட்டி, வெள்ளை தாளில் கையெழுத்து வாங்கி, நகராட்சி கமிஷனரிடம், நவாப் புகார் கொடுக்க வைத்துள்ளார்.

ஒரே கையெழுத்தில், 1.76 லட்சம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஜெயலலிதா முதல், கருணாநிதி வரை, பல்வேறு தலைவர்கள், ஆட்சியில் இருந்தபோது, எதிர்த்து போராடியவர்கள் அரசு ஊழியர் சங்கத்தினர். எனவே, மிரட்டி பணிய வைக்கலாம் என நினைத்தால், தி.மு.க., நகர செயலாளர் நவாப்பால், கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில், தி.மு.க., தோற்கும் என்பதை கூறிக் கொள்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில், நகராட்சி இளநிலை பொறியாளர் உலகநாதன், நகராட்சி ஊழியர்கள், அரசு ஊழியர் சங்கம், மருந்தாளுனர் சங்கம், சத்துணவு ஊழியர் சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொணடனர்.

கலைந்து போகச்செய்த போலீசார்

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தின்போது, நகராட்சி அலுவலக வளாகத்திற்குள், தற்காலிக டெங்கு தடுப்பு பெண் பணியாளர்கள், 20க்கும் மேற்பட்டோர், 'நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், தங்களிடம் அத்துமீறல், தகாத வார்த்தைகளால் திட்டியதாக' கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு இன்று (30ந்தேதி) அனுமதி வழங்கிய நிலையில், தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது எனக்கூறி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் அவர்களை கலைத்தனர். ஆர்ப்பாட்டத்தை வீடியோ எடுத்த, தி.மு.க., நிர்வாகிகள் உள்பட அனைவரையும்

தடுத்தனர்.






      Dinamalar
      Follow us