sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி பி.டி.ஓ., ஆபீசை பெண்கள் முற்றுகை

/

குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி பி.டி.ஓ., ஆபீசை பெண்கள் முற்றுகை

குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி பி.டி.ஓ., ஆபீசை பெண்கள் முற்றுகை

குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி பி.டி.ஓ., ஆபீசை பெண்கள் முற்றுகை


ADDED : அக் 18, 2024 02:57 AM

Google News

ADDED : அக் 18, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி

பி.டி.ஓ., ஆபீசை பெண்கள் முற்றுகை

ஓசூர், அக். 18-

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், பெரியபாப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் பகுதியின் குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி, நேற்று சூளகிரி பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது, அவர்கள் கூறுகையில், 'எங்கள் கிராமத்தில், 34 குடும்பத்தினர் வசிக்கிறோம். கடந்த, 6 மாதமாக எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை உள்ளது. ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் எடுக்கும் மின் மோட்டார் அடிக்கடி பழுதால், கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்' என்றனர்.

அவர்களை, அதிகாரிகள் சமாதானப்படுத்தி, விரைவில் புது மின் மோட்டார் பொருத்தி குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என, உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us