ADDED : டிச 19, 2024 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுமக்கள் குறைதீர் முகாம்
தர்மபுரி, டிச. 19-
தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் மீதான, குறைதீர்க்கும் முகாம், தர்மபுரி மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் நடந்து வருகிறது. நேற்று, தர்மபுரி மாவட்ட, ஏ.டி.எஸ்.பி., ஸ்ரீதரன் தலைமையில் நடந்த முகாமில், ஏற்கனவே பெறப்பட்ட, 70 மனுக்களில், 69 மனுக்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்தார். மேலும், புதிதாக, 49 மனுக்கள் பெறப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.