ADDED : ஜூலை 01, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 441 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர்.
தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க கலெக்டர் தினேஷ்குமார் அறிவுறுத்தினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.