sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீடுகளில் புகுந்த மழைநீர் பொதுமக்கள் கடும் பாதிப்பு

/

வீடுகளில் புகுந்த மழைநீர் பொதுமக்கள் கடும் பாதிப்பு

வீடுகளில் புகுந்த மழைநீர் பொதுமக்கள் கடும் பாதிப்பு

வீடுகளில் புகுந்த மழைநீர் பொதுமக்கள் கடும் பாதிப்பு


ADDED : அக் 12, 2025 02:54 AM

Google News

ADDED : அக் 12, 2025 02:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பர்கூர், ஊத்தங்கரை, போச்-சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்-கியுள்ளது. காலையில் வெயிலும், மாலை முதல் நள்ளிரவு வரை பெய்யும் மழையால் பல பகுதிகளில் சாலைகளிலும், வீடுக-ளுக்குள் மழைவெள்ளம் புகுந்துள்ளதால், பொதுமக்கள் அவதிய-டைந்து

வருகின்றனர்.

கிருஷ்ணகிரி பழையபேட்டை, ஆசிப் நகர், பழைய பஸ் ஸ்டாண்ட், டி.சி.ஆர்., சர்க்கிள், சோமார்பேட்டை பிரிவு சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் குளம் போல் மழைநீர் தேங்-கியுள்ளது. மழைநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம், திம்மாபுரம் பஞ்.,க்கு உட்பட்ட நாகராஜ மணியகாரபுரம் நகரிலுள்ள, 50க்கும் மேற்-பட்ட வீடுகளில் மழைநீர், கழிவுநீருடன் கலந்து புகுந்ததால் அப்பகுதிக்குள் செல்ல முடியாத சூழல் உள்ளது.

பி.டி.ஓ., அலுவலகத்திற்கு அருகிலுள்ள இப்பகுதிக்கு சாக்கடை கால்வாய் அமைக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவ-டிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

அதேபோல பர்கூரில், அரசு மருத்துவமனை, அரசு மகளிர் மேல்-நிலைப்பள்ளி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இப்பகுதிகளில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலைகளில் நீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us