ADDED : ஜூன் 20, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் ஓம்சக்தி நகரிலுள்ள சந்திராம்பிகை ஏரிக்கு செல்லும் கால்வாயில், நேற்று முன்தினம் அழுகிய நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது.
ஓசூர் டவுன் வி.ஏ.ஓ., வெங்கடேசமூர்த்தி புகார்படி, போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், 6 நாட்களுக்கு முன் அந்த நபர் இறந்திருக்கலாம் என தெரியவந்தது. அவர் கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.