/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பராமரிப்பற்ற பாம்பாறு அணை பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
/
பராமரிப்பற்ற பாம்பாறு அணை பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
பராமரிப்பற்ற பாம்பாறு அணை பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
பராமரிப்பற்ற பாம்பாறு அணை பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
ADDED : ஜன 17, 2025 12:55 AM
ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த, பாம்பாறு அணை பகுதியில் பராமரிப்பின்றி உள்ள பூங்காவை சரிசெய்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, கோரிக்கை எழுந்துள்ளது.
மக்களை மகிழ்வித்த பூங்காபாம்பாறு அணை பூங்காவிற்கு ஆரம்ப காலத்தில் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஊத்தங்கரையிலுள்ள தனியார் பள்ளி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களின் பெற்றோர், தங்களது குழந்தைகளை பார்க்க வருகையில், தங்களது குழந்தைகளை அழைத்து வந்து பேசி மகிழ்ந்து நேரத்தை செலவிட்டு செல்வர். மேலும், ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார மக்கள் பள்ளி விடுமுறை நாட்களில், தங்களது குழந்தைகளுடன் பாம்பாறு அணையை சுற்றி பார்த்து, பூங்காவில் அமர்ந்து உணவருந்தி, மர நிழலில் இருக்கைகளில் அமர்ந்து பேசி மகிழ்வர். குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்களும் இருந்தன. நிழல் தரும் மரங்கள் கண்ணை கவரும் மலர் செடிகள் இருந்தன.
பராமரிப்பின்றி வீண்ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பாம்பாறு அணை பூங்கா உள்ளதால், மக்களை கவரும் விதமாக, பல்வேறு அம்சங்களோடு பூங்கா இருந்தது. பூங்காவிற்கு வரும் மக்களிடம் பராமரிப்பு கட்டணமும், வாகனங்களுக்கு பாதுகாப்பு கட்டணங்களும் வசூலிக்கப்பட்டன. ஆனால் தற்போது, பூங்கா பராமரிப்பின்றி கிடக்கிறது. பூங்காவிலுள்ள விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து கிடக்கிறது. பூச்செடிகள், மரங்கள் போதிய பராமரிப்பின்றி கிடக்
கிறது. பூங்காவை சுற்றி முட்புதர்கள் மண்டி கிடக்கிறது, மரங்களை சுற்றி அமைக்கப்பட்ட மேடைகள் சேதமடைந்து கிடக்கிறது.
பாம்பாறு அணை பகுதி பூங்காவை சீரமைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.