/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பர்கூரில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
/
பர்கூரில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜன 23, 2026 07:38 AM

கிருஷ்ணகிரி: பர்கூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறையினர், ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு கலைக்-கல்லுாரி, பொறியியல் கல்லுாரி மற்றும் பள்-ளிகள், மிகப்பெரிய ஜவுளி மார்க்கெட்டுடன் போலீஸ் ஸ்டேஷன்களுடன் திருப்பத்துார், ஜோலார்பேட்டை செல்லும் சாலைகளும் இணைகின்றன. பரபரப்பான பர்கூர் நகரின் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிக-ரித்து சாலைகள் குறுகியதால், ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் சிரமமடைந்தனர்.
இதையடுத்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பர்கூர் பஸ் ஸ்டாண்ட் முதல் திருப்பத்துார் செல்லும் பிரிவு சாலை வரை இருந்த ஆக்கிரமிப்புகளை, நெடுஞ்சா-லைத்துறையினர் அகற்றினர். இது குறித்து வீடு மற்றும் கடைக்காரர்களுக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கியும் பலர் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதையடுத்து நெடுஞ்சாலைத்-துறையினர், பொக்லைன் உதவியுடன் சாலையின் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்பு-களை, பர்கூர் போலீசார் பாதுகாப்புடன் நேற்று அதிரடியாக அகற்றி சாலையை அகலப்படுத்-தினர்.
அப்பணியின் போது, கிருஷ்ணகிரி நெடுஞ்சா-லைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில், பர்கூர் தாசில்தார் சின்னசாமி, டவுன் பஞ்., செயல் அலுவலர் குமார் மற்றும் உதவி பொறி-யாளர் அன்பரசன் மற்றும் பலர் இருந்தனர்.

