ADDED : ஜன 14, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரி கீழ்தெருவை சேர்ந்தவர் லோகேஷ், 40. கூலித்தொழி-லாளி; நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, குருபராத்தப்-பள்ளி பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றார். அப்போது அவ் வழியாக ஹீரோ கிளாமர் பைக்கில் வந்த நபர், அவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி, அவரது பாக்-கெட்டில் இருந்த, 200 ரூபாயை பறித்து கொண்டு தப்ப முயன்றார். அங்கிருந்த பொதுமக்கள், அந்த நபரை பிடித்து, சூள-கிரி போலீசில் ஒப்படைத்தனர்
.விசாரணையில், கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றும், கிருஷ்ணகிரி அருகே பில்லனகுப்பத்தை சேர்ந்த கோவிந்தராஜ், 39, என தெரிந்-தது. அவரை கைது செய்த போலீசார்,
பணத்தை பறிமுதல் செய்-தனர்.

