/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.2,000 நோட்டுக்கு பதில் ரூ.500 நோட்டு: பர்கூரில் ஒட்டிய துண்டு பிரசுரத்தால் பரபரப்பு
/
ரூ.2,000 நோட்டுக்கு பதில் ரூ.500 நோட்டு: பர்கூரில் ஒட்டிய துண்டு பிரசுரத்தால் பரபரப்பு
ரூ.2,000 நோட்டுக்கு பதில் ரூ.500 நோட்டு: பர்கூரில் ஒட்டிய துண்டு பிரசுரத்தால் பரபரப்பு
ரூ.2,000 நோட்டுக்கு பதில் ரூ.500 நோட்டு: பர்கூரில் ஒட்டிய துண்டு பிரசுரத்தால் பரபரப்பு
ADDED : பிப் 08, 2024 04:44 PM
கிருஷ்ணகிரி : பர்கூரில், 2,000 ரூபாய் நோட்டு கொடுத்தால், அதற்கு பதிலாக, 500 ரூபாய் நோட்டுகள் தரப்படும் என ஒட்டப்பட்ட துண்டு பிரசுரத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் நேற்று, ஒட்டப்பட்டிருந்த- துண்டு பிரசுரங்களில், 2,000 ரூபாய் நோட்டு கொடுத்தால், அதற்கு பதிலாக, 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என குறிப்பிட்டு, மொபைல் எண்ணுடன் துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டு இருந்தது-. , 2023 மே, 20 ல், 2,000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் இந்த நோட்டீஸ் குழப்பத்தை ஏற்படுத்தியது.
போலீசார், அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் பெலவர்த்தி பஞ்., வள்ளுவர்புரத்தை சேர்ந்த சீதாராமன், 58, என்பது தெரிந்தது. அவர், பொங்கலில் வீட்டை சுத்தம் செய்யும்போது, 2,000 ரூபாய் நோட்டு, 4 கிடைத்ததாகவும், அதை சென்னை ரிசர்வ் வங்கியில் மாற்றி வந்ததாகவும் கூறியுள்ளார். இதுபோல, 2,000 ரூபாய் நோட்டு உள்ளவர்களிடம் கேட்டு வாங்கி, அதை மாற்றி, 500 ரூபாய் கமிஷன் எடுத்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், துண்டு பிரசுரத்தை ஒட்டியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், 'உங்களிடம் ஏதும், 2,000 ரூபாய் நோட்டுள்ளதா' என, போலீசாரிடமே கேட்டுள்ளார். அதிர்ச்சியடைந்த போலீசார், இவ்வாறெல்லாம் செய்யக்கூடாது, 2,000 ரூபாயை அரசு திரும்ப பெற்ற நிலையில், இதுபோல துண்டு பிரசுரங்களை ஒட்டக்கூடாது என எச்சரித்தனர்.

