sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மின்னணு பண பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் விற்பனை; வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

/

மின்னணு பண பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் விற்பனை; வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

மின்னணு பண பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் விற்பனை; வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்

மின்னணு பண பரிவர்த்தனை மூலம் இடுபொருட்கள் விற்பனை; வேளாண்மை உதவி இயக்குனர் தகவல்


ADDED : செப் 21, 2024 10:18 PM

Google News

ADDED : செப் 21, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர், ஜான் லுார்து சேவியர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சூளகிரி வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் மூலம், விவசாயிகளுக்கு விதைகள், நுண்ணுாட்ட உரங்கள், உயிர் உரங்கள், உயிரியல் பூச்சி கொல்லி மருந்துகள், பண்ணை கருவிகள் மற்றும் தார்ப்பாய்கள் போன்றவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. விவசாயிகள் மேற்கண்ட இடுபொருட்களை மானிய தொகை போக, மீதமுள்ள பணத்தை நேரடியாக செலுத்தி, இதுவரை வாங்கி சென்றனர்.

இதை எளிமையாக்கும் வகையில், தற்போதைய நேரடி பணம் பெறும் நடைமுறை நிறுத்தப்பட்டு, மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி, இடுபொருட்களை பெற்று கொள்ளும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே, சூளகிரி வட்டார விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையத்தில் இடுபொருட்கள் வாங்க வரும் போது, தங்களது ஏ.டி.எம்., கார்டுகள் அல்லது யு.பி.ஐ., அடையாள எண்களை கொண்டு பணம் செலுத்தி, இடுபொருட்களை பெற்று கொள்ளலாம். கூகுள் பே, போன் பே மூலமாக, கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us