/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சபரிமலைக்கு 8 டன் காய்கறி அனுப்பி வைப்பு
/
சபரிமலைக்கு 8 டன் காய்கறி அனுப்பி வைப்பு
ADDED : ஜன 06, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : சபரிமலை சேவகர்கள் சங்கம் சார்பில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, சபரிமலையில் உள்ள காளைகட்டி, எருமேலி, அழுதா நதி, விழிகந்தோடு ஆகிய பகுதிகளில் அன்னதானம் செய்ய, அரிசி, பருப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு பொருட்களை அனுப்பப்பட்டு வருகின்றன.
அதில் ஒரு பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி பகுதியில் இருந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 8 டன் காய்கறிகள் நான்கு சரக்கு வாகனங்களில் கொண்டு சென்றனர்.