sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது ரூ.5 லட்சம், 16 பவுன் நகை பறிமுதல்

/

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது ரூ.5 லட்சம், 16 பவுன் நகை பறிமுதல்

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது ரூ.5 லட்சம், 16 பவுன் நகை பறிமுதல்

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது ரூ.5 லட்சம், 16 பவுன் நகை பறிமுதல்


ADDED : அக் 20, 2024 01:45 AM

Google News

ADDED : அக் 20, 2024 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது

ரூ.5 லட்சம், 16 பவுன் நகை பறிமுதல்

ஓசூர், அக். 20-

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் பின்புறமுள்ள வி.ஓ.சி., நகரை சேர்ந்தவர் ரமேஷ், 50; பூ வியாபாரி. கடந்த மார்ச், 15 ல், இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த, 24 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர். ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார், அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து விசாரித்தனர். இதில், கர்நாடகா மாநிலம், மைசூரு ராஜிவ் நகரை சேர்ந்த சையத் அபுபக்கர், 46, திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

அப்போது தப்பி செல்ல முயன்ற சையத் அபுபக்கர், கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவருக்கு, ஓசூர் அரசு மருத்துவமனையில் மாவு கட்டு போடப்பட்டது. அவரிடம் விசாரித்த போது, ஓசூர் சாந்தபுரம் செந்தமிழ் நகரில் உள்ள ஒரு வீட்டில் கடந்தாண்டு ஜூன் மாதம், 12 லட்சம் ரூபாய் திருடியது தெரியவந்தது. அவரிடம் இருந்து, 16 பவுன் நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us