sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மேன்ஹோல் வழியாக வௌியேறும் கழிவுநீர்: சீரமைக்க வலியுறுத்தல்

/

மேன்ஹோல் வழியாக வௌியேறும் கழிவுநீர்: சீரமைக்க வலியுறுத்தல்

மேன்ஹோல் வழியாக வௌியேறும் கழிவுநீர்: சீரமைக்க வலியுறுத்தல்

மேன்ஹோல் வழியாக வௌியேறும் கழிவுநீர்: சீரமைக்க வலியுறுத்தல்


ADDED : அக் 15, 2025 01:15 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, தர்மராஜா கோவில் சாலையில், பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் ஓடுவதை சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தர்மராஜா கோவில் சாலை வழியாக பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.

இச்சாலையில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில், பாதாள சாக்கடை கால்வாயின் மேன்ஹோல் மூடி வழியாக, அடிக்கடி கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. நகராட்சி பணியாளர்கள் தற்காலிகமாக கழிவுநீரை வெளியேற்றி வருகின்றனர். ஆனாலும் வாரத்தில் இரண்டு முறை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுவதால், துர்நாற்றம் வீசுகிறது. கடந்த, இரண்டு நாட்களாக பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது.

இதனால் பள்ளி, மாணவ, மாணவியர் மற்றும் பாதசாரிகள் இச்சாலையில் நடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பாதாள சாக்கடை கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை, நிரந்தரமாக சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us