sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

3 மாதத்துக்கு முன் மாயமான நபர் எலும்புக்கூடாக மீட்பு

/

3 மாதத்துக்கு முன் மாயமான நபர் எலும்புக்கூடாக மீட்பு

3 மாதத்துக்கு முன் மாயமான நபர் எலும்புக்கூடாக மீட்பு

3 மாதத்துக்கு முன் மாயமான நபர் எலும்புக்கூடாக மீட்பு


ADDED : அக் 17, 2025 07:48 PM

Google News

ADDED : அக் 17, 2025 07:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அஞ்செட்டி: மூன்று மாதங்களுக்கு முன் மாயமான தொழிலாளி, எலும்புக்கூடாக மீட்கப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சேசுராஜபுரம் அருகே கவுண்டர் கொட்டாயை சேர்ந்தவர் முருகேசன், 46; கூலித்தொழிலாளி. இவர், தன் தந்தை மாதப்பனிடம், சொத்தை பிரித்து தர கேட்டு தகராறு செய்து வந்தார்.

பிரித்து கொடுக்காததால் ஆத்திரமடைந்த முருகேசன், ஜூன், 14ம் தேதி மாலை, தன் தந்தை வளர்த்து வரும் ஆடு, மாடுகள் குடிக்கும் தொட்டியில், யூரியாவை கலந்தார்.

அதை குடித்த, 9 ஆடுகள் மற்றும் இரு மாடுகள் உயிரிழந்தன.

அஞ்செட்டி போலீசார், முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வந்த முருகேசன் ஜூலை, 17ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.

அவரது மனைவி புகாரின்படி, அஞ்செட்டி போலீசார், முருகேசனை தேடினர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மரியாளம் வனப்பகுதியில், தோழிகுண்டு பாறையில் ஆண் எலும்புக்கூடு துாக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், முருகேசன் என்பதை இந்திராணி உறுதி செய்தார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு, சடலம் அனுப்பி வைக்கப்பட்டது. முருகேசன் துாக்கிட்டு தற்கொலை செய்ததாக, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us