sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆடு விற்று குடிக்க பணம் தராத தாயை கொன்ற மகன்

/

ஆடு விற்று குடிக்க பணம் தராத தாயை கொன்ற மகன்

ஆடு விற்று குடிக்க பணம் தராத தாயை கொன்ற மகன்

ஆடு விற்று குடிக்க பணம் தராத தாயை கொன்ற மகன்


ADDED : மே 06, 2025 07:36 AM

Google News

ADDED : மே 06, 2025 07:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரிகை : கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பசம்மா, 53. இவருக்கு, முருகன், 25, நாகராஜ், 23, ராஜேந்திரன், 22, ஆகிய, மூன்று மகன்கள், பல்லவி, 18, பூஜா, 16, ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

பசம்மா, ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வந்தார். மூத்த மகன் முருகன் அடிக்கடி மதுபோதையில், பசம்மாவிடம் செலவிற்கு பணம் கேட்டு, தகராறு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, முருகன் குடிப்பதற்கு, பசம்மாவிடம் பணம் கேட்டுள்ளார். பசம்மா, பணம் இல்லை எனக் கூறியதால், 'ஆட்டை விற்று பணத்தை எடுத்துக் கொள்கிறேன்' எனக்கூறி, தகராறு செய்துள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள ஆட்டுக் கொட்டகையில், ரத்தக் காயத்துடன் பசம்மா இறந்து கிடந்தார். விசாரணையில், பசம்மாவை, முருகன் கல்லால் அடித்து கொலை செய்து விட்டு, ஒரு ஆட்டுடன் தப்பிச் சென்றது தெரிந்தது. முருகனை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us