/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தண்டனையிலிருந்து விலக்கு அறிவிப்பு பிரதமருக்கு இலங்கை தமிழர்கள் நன்றி கடிதம்
/
தண்டனையிலிருந்து விலக்கு அறிவிப்பு பிரதமருக்கு இலங்கை தமிழர்கள் நன்றி கடிதம்
தண்டனையிலிருந்து விலக்கு அறிவிப்பு பிரதமருக்கு இலங்கை தமிழர்கள் நன்றி கடிதம்
தண்டனையிலிருந்து விலக்கு அறிவிப்பு பிரதமருக்கு இலங்கை தமிழர்கள் நன்றி கடிதம்
ADDED : டிச 06, 2025 03:20 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.
இங்கு, 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் இலங்கையிலிருந்து, 1954 முதல், 2015ம் ஆண்டு ஜன., 9ம் தேதிக்கு முன்பாக, உரிய ஆவணங்களின்றி இந்தியா-விற்குள் நுழைந்து, அரசிடம் பதிவு செய்து சட்டப்பூர்வமாக தங்-கியுள்ளனர். இப்படி, தமிழகம் முழுவதும் மொத்தம், 103 முகாம்களில் மொத்தம், 58,000 பேர் வசிக்கின்றனர்.இந்நிலையில், இலங்கை தமிழர் முகாமில் வசிப்போருக்கு, குடி
வரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் தண்டனையிலி-ருந்து விலக்கு அளித்து, மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு நன்றி தெரிவித்து, ஓசூர் கெலவரப்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும், 300க்கும் மேற்பட்டோர், பிரதமர் மோடிக்கு கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

