/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' ஓசூரில் நாளை முகாம்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' ஓசூரில் நாளை முகாம்
ADDED : டிச 05, 2025 11:13 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட் டம், மாசி-நாயக்கனப்பள்ளியில் நாளை (6ம் தேதி) 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடக்-கிறது.
இது குறித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓசூர் வட்டாரத்தில் உள்ள மாசிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நி-லைப்பள்ளியில் நாளை, 6ம் தேதி காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடக்-கிறது. இதில், பொதுமக்களுக்கு தேவையான ரத்த பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, எக்ஸ்ரே, ஈசிஜி, எக்கோ, அல்ட்ரா சவுண்ட், கண் பரிசோதனை மற்றும் மகப்பேறு மருத்துவம் போன்ற, 17 வகையான சிறப்பு நிபு-ணர்களை கொண்டு பரிசோதனை மேற்கொள்-ளப்பட உள்ளது. முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

