ADDED : அக் 16, 2025 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், அரசம்பட்டி பஞ்.,ல், அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட சிறப்பு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
முகாமில், காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., சதீஷ்பாபு, போச்சம்பள்ளி தாசில்தார் அருள், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி, சரவணன், கவுதம், இளையராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.