/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிராக்டர் மோதி முதியவர் பலியால் மறியல் வாகனத்தை ஓட்டிய மாணவன், தந்தை கைது
/
டிராக்டர் மோதி முதியவர் பலியால் மறியல் வாகனத்தை ஓட்டிய மாணவன், தந்தை கைது
டிராக்டர் மோதி முதியவர் பலியால் மறியல் வாகனத்தை ஓட்டிய மாணவன், தந்தை கைது
டிராக்டர் மோதி முதியவர் பலியால் மறியல் வாகனத்தை ஓட்டிய மாணவன், தந்தை கைது
ADDED : ஜூன் 29, 2025 01:19 AM
அஞ்செட்டி, அஞ்செட்டியில், மாணவன் ஓட்டிய டிராக்டர் மோதி முதியவர் பலியானார். இதனால் மக்கள் மறியலில் ஈடுபட்ட நிலையில், மாணவன் மற்றும் அவரது தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன், 70. சீங்கோட்டையை சேர்ந்த விவசாயி குமார், 47. இருவரும் நேற்று காலை, 8:00 மணிக்கு, ராமர்கோவில் பஸ் ஸ்டாப்பில் இருந்த மரத்தடி திண்டில் அமர்ந்திருந்தனர். அப்போது, அவ்வழியாக அஞ்செட்டி அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், ராமர்கோவில் பகுதியை சேர்ந்த விவசாயி சரவணன், 50, என்பவரின் மகன் கணேசன், 17, டிராக்டரை வேகமாக ஓட்டி வந்தார்.
கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர், சாலையோர திண்டில் அமர்ந்திருந்த காளியப்பன், குமார் மீது மோதியது. இதில், முதியவர் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். குமார் இடது காலில் படுகாயமடைந்து, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்திற்கு காரணமானவரை
போலீசார் உடனடியாக கைது செய்யக்கோரி, காளியப்பனின் உறவினர்களான வண்ணாத்திப்பட்டியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர், அஞ்செட்டி - தேன்கனிக்கோட்டை சாலையில், காலை, 11 மணிக்கு மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விபத்திற்கு காரணமான மாணவன் கணேசன் சிறுவன் என்பதால் அவரையும், டிராக்டரை ஓட்ட அனுமதித்த அவனது தந்தை சரவணன் ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அதனால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.