/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவிக்கு குழந்தை: வாலிபருக்கு போக்சோ
/
மாணவிக்கு குழந்தை: வாலிபருக்கு போக்சோ
ADDED : டிச 29, 2024 01:16 AM
மாணவிக்கு குழந்தை: வாலிபருக்கு போக்சோ
போச்சம்பள்ளி, டிச. 29-
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும், 17 வயது மாணவிக்கு கடந்த, 23ல் வயிற்று வலி ஏற்பட்டது. அவரை போச்சம்பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ
மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், மத்துார் போலீசார் விசாரணையில், கர்ப்பத்திற்கு காரணமான கவியரசு,25, என்பவரை போக்சோ வழக்கில் நேற்று கைது செய்தனர்.