sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நெடுஞ்சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்த டேங்கர் லாரி டிரைவர் பலி; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

/

நெடுஞ்சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்த டேங்கர் லாரி டிரைவர் பலி; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நெடுஞ்சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்த டேங்கர் லாரி டிரைவர் பலி; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

நெடுஞ்சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்த டேங்கர் லாரி டிரைவர் பலி; 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


ADDED : ஜன 02, 2024 11:59 AM

Google News

ADDED : ஜன 02, 2024 11:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில் டிரைவர் பலியானார். விபத்தால் அப்பகுதியில், 4 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.

பெங்களூருவிலிருந்து, 36,000 லிட்டர் எத்தனால் ஏற்றிய டேங்கர் லாரி, கிருஷ்ணகிரி வழியாக கேரள மாநிலம் கொச்சிக்கு சென்று கொண்டிருந்தது. நேற்று மதியம், 3:45 மணியளவில் கிருஷ்ணகிரி, மேலுமலை அருகே, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து, பயங்கர சத்தத்துடன் வெடித்து தீப்பற்றியது. கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறையினர் டேங்கர் லாரி தீயை அணைத்தனர்.

குருபரப்பள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தின் போது, தீக்காயத்துடன் மீட்கப்பட்ட லாரி டிரைவரான, கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராமலிங்கம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். இந்த விபத்தால், ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்தன. 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக ஓசூர், பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள், கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை வழியாக ஓசூருக்கு திருப்பி விடப்பட்டன. கிருஷ்ணகிரி, ஏ.டி.எஸ்.பி., சங்கு தலைமையில், இன்ஸ்பெக்டர் சுல்தான் மற்றும் போலீசார், டேங்கர் லாரியை அப்புறப்படுத்தி, இரவு, 8:00 மணிக்கு போக்குவரத்தை சீர்செய்தனர்.

விபத்து பகுதியான மேலுமலை

கிருஷ்ணகிரி அடுத்த மேலுமலை, ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த, 2016 ஜூன், 3 ல் தனியார் பஸ் - லாரி மோதிய விபத்தில், 20 க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

தாழ்வான பகுதி என்பதால் இங்கு, தொப்பூர் கணவாயில் அமைக்கப்பட்டுள்ளது போல், சாலைகளில் பிரதிலிப்பு ஸ்டிக்கர், அறிவிப்பு பலகைகள், ஒலிபெருக்கிகள் மூலம், வாகன விபத்து விழிப்புணர்வு வைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us