/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விதையின் தரத்தை அறிய பரிசோதனை செய்ய வேண்டும்
/
விதையின் தரத்தை அறிய பரிசோதனை செய்ய வேண்டும்
ADDED : நவ 15, 2025 02:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் லோகநாயகி வெளியிட்டுள்ள அறிக்கை: விதை முளைக்கும் போது பூச்சி, நோய் தாக்குதல் இன்றி நன்கு முளைத்து செழிப்-புடன் வளர்ந்து, விளைச்சலில் லாபம் காண தரமான விதையை உபயோகித்தல் மிக அவசியம். தரமான விதை என்பது, முளைப்-புத்திறன், புறத்துாய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகிய-வற்றை குறிக்கும். இத்தர நிர்ணயங்கள் ஒவ்வொரு பயிருக்கும் மாறுபடும்.
தேவையான பயிர் எண்ணிக்கை பராமரிக்க நல்ல முளைப்பு திறன் வேண்டும். இதனால் விதை செலவு குறையும். விதை-களை சேமிக்கும் போது, பூச்சி நோய் தாக்குதலால் முளைப்பு திறன் கெடாமல், நீண்ட நாட்கள் சேமிக்க, விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்க கூடாது. இதற்கு விதை பரி-சோதனை அவசியம். .விதை விற்பனையாளர்கள், தங்கள் இருப்பு வைத்துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ளவும், சேமித்து வைத்திருக்கும் விதை-களின் தரத்தை அறிந்து கொள்ளவும் விதை மாதிரி எடுக்க வேண்டும். விதை உரிய விபரங்களுடன் ஒரு மாதிரிக்கு, 80 ரூபாய் என்ற விகிதத்தில் வேளாண் அலுவலர், விதை பரிசோ-தனை நிலையம், கலெக்டர் அலுவலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி, தரத்தை அறிந்து
கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

