/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த விவசாயி சாவு
/
கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த விவசாயி சாவு
ADDED : செப் 21, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏத்தாப்பூர்: ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து அபிநவத்தை சேர்ந்த விவசாயி பழனியப்பன், 57. நேற்று காலை, 9:30 மணிக்கு அதே பகுதியில் உள்ள அவரது விவசாய கிணற்றில் தண்ணீரை எடுத்துவிட இறங்-கினார்.
தொடர்ந்து மேலே வர, நீச்சல் தெரிந்த அவர், வழக்கம்போல் கயிறு மூலம் ஏறினார். அப்போது கயிறு அறுந்துபோக, கிணற்-றோர பாறை மீது விழுந்தார். அதில் தலையில் அடிபட்டு நீரில் மூழ்கினார். இதுகுறித்து, 10:30 மணிக்கு கிடைத்த தகவல்படி, 10 நிமிடத்தில் வாழப்பாடி தீயணைப்பு
துறையினர் அங்கு சென்றனர். கிணற்றில் இறங்கி தேடி, 11:30 மணிக்கு பழனியப்பன் உடலை வெளியே கொண்டு வந்தனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்-றனர்.